உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா …

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா – 2

1. முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய் – 2
பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் – 2

2. கடல் நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்தே உன் பாதம் சேரும் – 2
உலகாளும் தாயே உனைப் பாடும் வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா – 2

3. மலடான மங்கை மடி மீது மகனை
மகிழ்ந்தாடச் செய்த மகிமையின் தாயே – 2
குருடானேன் உன்னை கரங்கூப்பி நின்றால்
அருளாகி எமக்கு ஒளி தாரும் தாயே – 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top