​தாவீதின் குலமலரே

​தாவீதின் குலமலரே – ஒளி

தாங்கிடும் அகல்விளக்கே – எமைக்

காத்திடும் ஆரணங்கே – அருள்

சுரந்திடும் தேன்சுனையே
1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்

கறை சிறிதில்லாக் காத்திருந்தார்

மறையவர் புகழும் மாமணியே

கரை சேர்ப்பதுவே உன் பணியே
2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே

நற்கனி சுதனை எமக்களித்தாய்

கற்றவர் மற்றவர் யாவருமே

பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top