வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே…

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ – 2

1. பன்னிரு வயதில் ஆலயத்தில் – அன்று
அறிஞர்கள் புகழ்ந்தவரை – 2
கரங்களை விரித்தே கள்வனைப்போல்
கழுமரத்தினில் கண்டதினால்

2. திருமணப் பந்தியில் கனி இரசமே – அன்று
அருளிய திருமகனை – 2
குருதி சிந்தி கடற்காடியினை – இன்று
பருகிடக் கண்டதினால்

3. கண்ணீரே சிந்திய மனிதருக்கு – அருள்
புண்ணிய திருமகனே – 2
மண்ணவர்க்காகத் தன்னுயிரை – இன்று
மாய்த்திடக் கண்டதினால்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top