Ave Maria

​தாவீதின் குலமலரே

​தாவீதின் குலமலரே – ஒளி தாங்கிடும் அகல்விளக்கே – எமைக் காத்திடும் ஆரணங்கே – அருள் சுரந்திடும் தேன்சுனையே 1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார் கறை சிறிதில்லாக் காத்திருந்தார் மறையவர் புகழும் மாமணியே கரை சேர்ப்பதுவே உன் பணியே 2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே நற்கனி சுதனை எமக்களித்தாய் கற்றவர் மற்றவர் யாவருமே பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா 

​தாவீதின் குலமலரே Read More »

​மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல்

​மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே 1. மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் 2. தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ நேசம் வைத்தாள்வது நின் கடனாமே 

​மாசில்லாக் கன்னியே மாதாவே உன்மேல் Read More »

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே ஏகமகனாக செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே தந்தையினின்று நித்தியமாக செனித்த இறைவன்

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக Read More »

Scroll to Top